வியாழன், 23 ஏப்ரல், 2009

என் இனிய உள்ளங்களே... நன்றி.....நன்றி...

எனது பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்தும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்...... குறுகிய இந்த வாழ்க்கை காலத்தில் நான் பதித்த கால் தடங்களை திரும்பிப் பார்க்கிறேன்... பிறந்த போது என்னுடன் இருந்த எனது சொந்தகளுக்கு மேலாக நீங்களும் இப்போது என்னுடன் இருக்கிறீர்கள்... எனது பாடசாலை காலம் முதல் இன்று வரை பல்வேறு மனித முகங்களை உள்ளங்களை சந்தித்திருக்கிறேன்.... இந்த காலத்தில் என்னால் தெரிந்தே யாருக்கும் கெடுதி நினைத்ததில்லை.... ஆனாலும் யாரும் அப்படி நினைத்திருப்பின் மன்னித்து விடுங்கள்... இதுவரை எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், தெரிவிக்க இருக்கிறவர்களுக்கும், தெரிவிக்க மறந்தவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்... நான், நன்றி தெரிவிப்பதையோ மன்னிப்பு வேண்டுவதயோ விரும்புவதில்லை... அதற்காக நீங்களும் அப்படி இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளவுமில்லை ... உங்கள் உணர்வுகளை மதிப்பதனால் தான் மேற்படி நன்றிகளும் மன்னிப்பு கோரலும்... குறுகிய வட்டத்துக்குள் இருந்த எனக்கு இன்று உலகம் முழுதும் பல்லாயிரம் நண்பர்கள்... உங்களை எனக்களித்த இறைவனுக்கு என் முதல் நன்றிகள் .... இரண்டாவதாக எனது பாடசாலைக்கு... அடுத்து இன்று வளர்ந்து உயர்ந்து நிற்கும் இணையத்துக்கு/ அல்லது அதனை தந்தவருக்கு எனது பிரதேச மக்களோடும் நாட்டு இளையவர்களோடும் தொடர்பாக்கிய, எனது திறன் விருத்திக்கு ஊக்கமளித்த 1. பிரதேச செயலகம் - சாய்ந்தமருது (இது எனக்கு நல்ல நண்பர்கள் பலரையும்,உறவுகளையும், நான் என்றும் நேசிக்கும் மேலதிகாரியையும் தந்தது-விஷேடமாக) 2. இலங்கை இளையோர் பாராளுமன்றம் ( இதுதான் எனது வாழ்க்கை பாதை மாற்றத்துக்கு காரணம் என்றால் மிகையல்ல) 3. தேசிய இளையோர் சேவைகள் மன்றம்(செயற்திறன் அற்றிருந்தாலும் பல்வேறு நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்) * மூஞ்சிப்புத்தக(Face Book) நண்பர்களுக்கும் எனது விசேட நன்றிகள்..... தெரு விளக்குக்கு வந்து போகும் நீங்கள் எனது இடுகைகளுக்கு பின்னூட்டம் இடுமாறு வேண்டுகிறேன்.... இதுவே எனக்கு தூண்டுகோலாக இருக்கும்.... -------மீண்டுமொருமுறை என்னை வாழ்த்துக்களால் போர்த்தும் நண்பர்களுக்கு நன்றிகள்- ----------என்னை முதலில் வாழ்த்திய தோழியே உமக்கும் நன்றி ------------
உங்களால் ஏற்பட்ட இந்த மன மகிழ்ச்சியை சொல்லில் வடிக்க முடியவில்லை
Categories: , , , , , , ,

3 கருத்துகள்:

  1. வாழ்க வளமுடன் !

    என்றும் எங்கள் அன்பும் ஆதரவும் உங்கள் செய்கைகளில் அக்கறை காட்டும்

    என்றென்றும் ப்ரியமுடன்
    அன்புச்சிநேகிதி
    டயானா

    பதிலளிநீக்கு
  2. நண்பா நீங்க சொன்னது உண்மை அப்படியே இருக்கு இனி உங்களையும் நான் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. பரவி கிடக்கும் வலைப் பதிவாளர்களிடையே தங்கள் பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்துகிறது...
    என்னையும் பின்தொடரும் உங்களுக்கு என் நன்றி...
    கொஞ்சமாவது நல்லா எழுதலாம் எண்டு நினைக்கிறன்

    பதிலளிநீக்கு

உங்கள் பார்வை